ஆன்லைன் கேர்ள் ப்ரண்டின் பிறந்தநாளுக்கு இளைஞர் கொடுத்த சர்ஃப்ரைஸ்!


உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சல்மான். இவர் ஆன்லைன் மூலம் பெண் ஒருவருடன் பேசி வந்துள்ளார்.

இதன்பின், அந்த பெண்ணின் பிறந்தநாள் தினத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கே சென்று அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சல்மான் திட்டமிட்டுள்ளார்.

இதனிடையே, அவர் பெங்களூரில் இருந்து லக்னோவிற்கு விமானம் மூலம் கிளம்பி அங்கிருந்து பின்னர் பேருந்து மூலம் தனது காதலி வசிக்கும் லக்கிம்பூர் கேரி பகுதிக்கு வந்தடைந்துள்ளார்.

சுமார் 2000 கி.மீ வரை பயணம் செய்து வந்த சல்மான், அந்த பெண்ணிற்காக சாக்லேட்டுகள் மற்றும் பரிசு பொருட்களை அதிகம் வாங்கி வந்துள்ளார்.

மேலும், நேரடியாக அந்த பெண்ணின் வீட்டிற்கு சல்மான் சென்ற நிலையில், புதிதாக ஒருவர் தங்களது வீட்டிற்கு வந்ததைக் கண்ட பெண்ணின் பெற்றோர்கள், சந்தேகத்தின் பெயரில் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பின்னர் அங்கு வந்த போலீசார், இளைஞரை பிடித்து சென்று ஒரு இரவு முழுவதும் காவல் நிலையத்தில் உட்கார வைத்தனர்.

ஆன்லைன் மூலம் அந்த பெண்ணுடன் நட்பை வளர்த்துக் கொண்டதாக தெரிவித்த சல்மான், அவரது பிறந்தநாளுக்கு வேண்டி இத்தனை தூரம் பயணித்து வந்ததை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் அந்த இளைஞரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.