இந்தியாவின் கொரோனா தடுப்பூசியை கொள்வனவு செய்ய பிரேசில் திட்டம்!
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாரத் பயோடெக்கின் தடுப்பூசியை கொள்வனவு செய்ய பிரேசில் தீர்மானித்துள்ளது.
பிரேசிலை சேர்ந்த தனியார் மருத்துவமனை சங்கம் பாரத்பயோ டெக் நிறுவனத்தின் கோவேக்சின் தடுப்பூசியை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் முதல் கட்டமாக 50 இலட்சம் தடுப்பூசிகளை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் கோவேக்சின் தடுப்பூசி அனுமதி குறித்து அரசிடம் பேசி வருவதாகவும் பிரேசில் தனியார் மருத்துவ மனை சங்கம் தெரிவித்துள்ளது.
கோவேக்சின் தடுப்பூசியை மத்திய அரசு அனுமதித்த பிறகே தனியாருக்கு கொடுக்க முடியும். அதேபோல் பிரேசிலில் தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்டாலும் அந்நாட்டு அரசு அனுமதிக்கு பிறகே தடுப்பூசியை பயன் படுத்த முடியும்.
பிரேசில் அரசு தடுப்பூசி வழங்கும் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை