25 நாட்களுக்கு லெபனானில் முழு பொது முடக்கம்!

 


லெபனானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளநிலையில், எதிர்வரும் 25 நாட்களுக்கு முழு பொது முடக்கத்தை அமுல்படுத்த அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.


இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பெப்ரவரி முதலாம் திகதி வரை தொடர்ந்து 25 நாட்கள் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படவுள்ளது.


பல்பொருள் அங்காடிகள் மற்றும் மருந்தகங்கள் மாலை 5 மணி வரை செயற்படும். இதைத்தவிர அனைத்து கடைகளும் உணவகங்களும் மூடப்படும்.


மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை தவிர மாலை 6.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் ஹமாத் ஹாசன் கூறுகையில், ‘கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அதிக படுக்கைகள் இல்லாத நிலையில், நாட்டின் நிலைமை ஆபத்தான நிலையை எட்டியுள்ளது.


இதனை தடுக்கும் வகையில் புதிய பொதுமுடக்கத்தை செயற்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது’ என கூறினார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.