உள்நாட்டு தீவிரவாத அபாயம் குறித்து மதிப்பீடு செய்ய பிடன் உத்தரவு!




முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்களால் தலைநகரின் மீதான தாக்குதலை அடுத்து, உள்நாட்டு பயங்கரவாதத்தின் ஆபத்து குறித்து முழு மதிப்பீட்டை நடத்துமாறு ஜனாதிபதி ஜோ பிடன் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் எப்.பி.ஐ மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் திணைக்களத்துடன் இணைந்து தேசிய புலனாய்வு பிரிவும் குறித்த திப்பீட்டை நடத்தும் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

ஜனவரி 6 ஆம் திகதி தலைநகர் மீதான தாக்குதல் மற்றும் நிகழ்ந்த துன்பகரமான மரணங்கள் மற்றும் அழிவு ஆகியவை நீண்ட காலமாக நாம் அறிந்ததை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும் வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் உள்நாட்டு வன்முறை மற்றும் தீவிரவாதத்தின் எழுச்சி என்பன வளர்ந்து வரும் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் என்றும் வெள்ளை மாளிகையின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.