பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்ட தகவல்!


பிரதமர் மகிந்த ராஜபக்ஸின் உடல் நிலை குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என பிரதமர் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உடல் நிலை, கடுமையாக மோசமடைந்துள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியதன் பின்னணியில், பிரதமர் ஊடகப் பிரிவு இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தனது நாளாந்த அலுவல்களில் ஈடுபட்டுள்ளதாகவும், நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உடல் ஆரோக்கியம் குறைவடைந்துள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மை புறம்பானவை என பிரதமர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.