ஓசோவின் தத்துவங்கள் சில!


வாழ்வில் நீங்கள் எந்த நிலையிலும் இருக்கலாம், சந்தோஷமாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒரு பிரச்னையில் இருந்தாலும்  சரி.... உங்களுக்கான ஒரு ஆரம்பமோ, தீர்வோ, முடிவோ, நம்பிக்கையோ ஓஷோவின் இந்த தத்துவ வார்த்தைகளில் அடங்கி இருக்கலாம்.  படியுங்கள். வாழ்வை கொண்டாடுங்கள்.

"நான் இயற்கையிடம் முழுமையாக நம்பிக்கையுணர்வு கொண்டிருக்கிறேன். நான் கூறியதில் ஏதாவது உண்மை இருக்குமானால் அது அழியாமல் நிலைத்திருக்கும்." என்று சொன்னவர் தத்துவஞானி ஓஷோ. 


ஓஷோ சொன்ன சொற்கள் அழியாமல் கல்வெட்டுகள் பதிந்துவிட்டது. கடல் அலைகள் ஓயாமல் கரையை தொடுவதுபோல... ஓஷோவின் தத்துவங்கள் கோடிக்கணக்கான மக்களிடம் சென்று சேர்ந்து கொண்டே இருக்கின்றன. 

1931-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் ஓஷோ. சுதந்திரமாக வளர்ந்தவர். எதையும் எளிதில் கற்றார். பல தியான முறைகளை அறிந்தார். கல்லூரியில் சேர்ந்து தத்துவம் பயின்றார். பலரது எடக்கு மடக்கான கேள்விக்கும், புதிர்களுக்கும், வாழ்க்கையின் இன்ப துன்பங்களுக்கும் எளிமையான விளக்கம் கொடுத்தார். 


* ‘நீங்கள் எந்த அளவு உயிர்ப்புடன் இருக்கிறீர்களோ, அந்த அளவுக்குத் தன்னை அறிய முடியும். நீங்கள் உயிர்ப்புடன் இல்லாவிடில், வாழ்க்கையை அறியவே முடியாது

* இதுவரை கேட்டது அனைத்தையும் மறந்துவிடு. உனது கோப்பையைக் காலியாக வைத்திரு!

* இருள் என்ற ஒன்று இல்லை. வெளிச்சத்தை எடுத்துச் செல், இருள் மறைந்துவிடும். இருள் இருக்கிறதா? 

* மரத்துக்கு அருகில் செல்லுங்கள். யாரும் பார்க்காதபோது அதனுடன் பேசுங்கள்.மரத்தை தழுவிக் கொள்ளுங்கள். உங்களை நல்லவர் என்று அந்த மரம் உணரட்டும்! 

* சிலவற்றைப் பார்க்கும்போது உங்களுக்கு அழகாய் தெரிகிறது. அப்படியானால் உங்களுக்குள் அழகு இருக்கிறது!

* ஒருவரது கண்ணைப் பார்க்கும்போது உங்கள் இதயத்தை உங்கள் கண்ணுக்குக் கொண்டு வாருங்கள்!

* அனைத்தையும் குழந்தையின் பார்வையில் பாருங்கள்- குழப்பம் இருக்காது!

* வாழ்க்கை தருவது யாவும் சரியானதே! வாழ்க்கை பறித்துக் கொள்வது யாவும் சரியானதே!

* அன்பு வெறுப்பு இல்லாமல் அமைந்திராது! நீ விரும்புகிற நபரையே தான் வெறுக்கவும் செய்வாய்.

* செருப்பு பொருந்தியதும் கால்களை மறந்துவிடுகிறோம்!

* என்ன செய்வது என்பது கேள்வி அல்ல! எதையும் எப்படிப் பார்ப்பது என்பதுதான் கேள்வி!

* எல்லா ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். எல்லா பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான். ஏனென்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவாக்கியது தான் ஆணும் பெண்ணும்! இதில் ஆண் யார்? பெண் யார்?

* நண்பன் என்பவன் குறைந்த அளவு பகைமை கொண்டவன். பகைவன் என்பவன் குறைந்த அளவு நட்பு கொண்டவன்.

* பேசும்போது பயப்படாதீர்கள்! பயப்படும்போது பேசாதீர்கள்! 

* எல்லாவித ஆனந்தங்களும் தற்காலிகமானதாக இருக்கும் போது தண்டனை மட்டும் எப்படி நிரந்தரமாக இருக்க முடியும்? 

* ரசித்ததைப் பாராட்டாதவன் கலைக் கொலைகாரன்!

* உனக்காகப் பொய் சொல்பவன், உனக்கு எதிராகவும் பொய் சொல்வான்.

* நேராக வளரும் மரம் தான் முதலில் வெட்டப்படும்.

* உன்னை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை, அதேபோல உன்னை விட தாழ்ந்தவர்கள் யாரும் இல்லை என்பதை நீ ஏற்றுக் கொள்ளுதலே உண்மையான எழுச்சியாகும்.

* புத்திசாலியான மனிதன் மாறிக் கொண்டும், நகர்ந்து கொண்டும், ஆடிக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருப்பான். அவனுக்கு வானம் கூட எல்லையாக முடியாது.

* தியானம் உன்னை உன்னுடைய உள்ளே இருக்கும் புனிதத்தலத்திற்கு கூட்டிச்செல்லும். நீ அங்கே கடவுளை காணலாம், வேறு எங்கும் காண முடியாது.

* பக்குவம் என்பது யாரையும் சாராதிருப்பது.

* குழந்தைகள் உங்களுடையவர்களல்ல, உங்கள் மூலம் வந்துள்ளவர்கள் அவ்வளவே. 

*  சமூகம், வாழ்வின் மூன்று முக்கிய விஷயங்களை அமுக்கப் பார்க்கிறது – அவை செக்ஸ், மரணம், வாழ்வின் பயனற்ற தன்மை.

* பாதுகாப்பாக இருப்பதாக நினைத்துக்கொள்ளும் மக்கள், அதிகம் உளறுகிறார்கள் – எந்தப் பயனுமற்ற இரைச்சல் இது.

* குடும்பம், நண்பர்கள், மகன், மகள் போன்ற எல்லாமே வெறும் வசதிகளே, பழக்கங்களே, ஊட்டப்பட்ட நம்பிக்கைகளே.

* நட்சத்திரங்கள், பாறைகள், நதிகள் என இவையாவும் உணர்வின்றி இருக்க முடியாது. உணர்வுதான் அவற்றின் வாழ்க்கையே. மனிதன் தலைகீழாகி விட்டான். மூளை முக்கியத்துவம் பெற்றுவிட்டது. மேலும் மூளை உணர்வை அடக்கிவைக்கிறது.

* உண்மையான சுதந்திரம் உன்னிடமிருந்து சுதந்திரமடைவதுதான்.

* நீங்கள் விழித்திருக்கிறீர்களா? வெற்றி உங்களுடையதே!

* கடவுளுக்குப் பிடித்தமானது சிரிப்பு! கடவுள் மகிழ்ச்சியாக இருப்பவர்களை நேசிக்கிறார்! 

* நீங்கள் உறங்கி எழுந்த பின்னால் தான் தூங்கியதையே உணர்வீர்கள்

* நாக்கில் சொற்களின் சுவையை உணருங்கள்

* நீந்தப் பழகாதீர்கள்! மிதக்கப் பழகுங்கள்!

* துளி கடலில் இருக்கிறது! கடல் துளியில் இருக்கிறது!

* இரண்டு முயல்களை விரட்டினால் ஒன்றைக்கூடப் பிடிக்கமுடியாது!

* கொந்தளிப்பு இல்லாத கடல் திறமையான மாலுமியை உருவாக்குவது இல்லை!

* எப்போதும் வயிற்றைப் பற்றி மட்டுமே கவலைப்படுபவர்கள் தலையைப் பட்டினி போடுகிறார்கள்!

* திறமையான தச்சன் மரச்சாமான்கள் செய்யும் போது குறைந்த வெட்டுகளையே வெட்டுவான்

* இருவருக்கும் விருப்பம் இல்லாமல் சண்டை நடக்காது!

* சொல்லாதவற்றின் பாடலே கண்ணீர்!

* கணவனாக இரு; எப்போதும் கணவனாகவே இருக்காதே! தாயாக இரு; ஆனால் எப்போதும் தாயாகவே இருந்துவிடாதே!

* சிரித்த முகம் இல்லாதவன் சொந்தமாகக் கடை வைக்கக்கூடாது

* ஒரு மலை உச்சியில் ஏறி நின்றால்தான் இன்னொரு மலை உச்சியைப் பார்க்க முடியும்

* வாள் உறையை வெட்டாது

* நீ என்ன பூவாக வேண்டுமானாலும் இரு; ஆனால் பூக்க மறக்காதே!

 கோவில் என்பது உண்மையில் ஒன்றே ஒன்றுதான். அது நீதான். நீ உனக்குள் செல்ல வேண்டும்.

* ஆசைப்பட்டால் இழப்பீர்கள்; ஆசைப்படாவிட்டால், அது உங்களுடையதே!

* எல்லாவற்றையும் ஓய்வாக எடுத்துக்கொள்ளுங்கள்.

* எல்லா நம்பிக்கைகளும் விஷம்போன்றது.

* உங்கள் சக்தி அனைத்துமே பாலுணர்வு சக்தியே. வெளிப்பாடுதான் வெவ்வேறு விதமாக இருக்கிறது.

* என்றாவது ஒருநாள் உன்னுள் அணு வெடித்து வெளிப்படல் நிகழ்ந்தே தீரும்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.