நாடாளுமன்ற ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!


நாடாளுமன்ற ஊழியர்கள் சகலரும் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர் என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவசியமாயின் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 தொற்றுறுதியான அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுடன் தொடர்புடைய நாடாளுமன்ற பணிக்குழாமை சேர்ந்த 15 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேநேரம், முன்னதாக அமைச்சர் தயாசிறிய ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பிரதமரின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான செயலாளர் குமாரசிறி ஹெட்டிகேவுக்கும் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவருடனும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூக் ஹக்கீமுடனும் தொடர்புடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரை தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதுவரையில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.