பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்துக்கு கூட்டமைப்பு ஆதரவு!


 வடக்கு – கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனவீர்ப்புப் போராட்டத்துக்கு வடக்கு – கிழக்கு சிவில் சமூக அமைப்புக்கள் விடுத்துள்ள அழைப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை வழங்கும் என கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

எதிர்வரும் 3 ஆம் திகதி முதல் 6 ஆம் திகதி வரை மேற்கொள்ளவுள்ள இந்தப் போராட்டம் தொடர்பில் சிவில் சமூகம் விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

இலங்கை அரசாங்கத்தால் தொடர்ந்தும் தமிழ் மக்கள் மீது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும்நிலையில் அரச திணைக்களங்கள் ரீதியிலான ஆக்கிரமிப்பும் தொடர்வதனை வெளிக்கொணரும் வகையில் வடக்கு – கிழக்கில் செயல்படும் சிவில் அமைப்புக்கள் பல இணைந்து விடுத்துள்ள அழைப்புக்கு வலுச்சேர்க்கும் வகையில் கூட்டமைப்பும் தனது ஆதரவைத் தெரிவிக்கின்றது.

வடக்கு – கிழக்கில் உள்ள சுமார் 200 இற்கும் மேற்பட்ட பாரம்பரிய இந்து ஆலயங்களைக் கையகப்படுத்துவதற்கான முயற்சிகள், மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள், மீதான அடக்குமுறைகள், போராட்டங்களை முன்னெடுத்து வரும் சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களைத் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றமை, கருத்து சுதந்திரம் மீறல் ஆகியவற்றோடு தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்களக் குடியேற்றங்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை போன்ற செயல்களைக் கண்டித்து இடம்பெறும இப்போராட்டத்துக்கு எமது ஆதரவோடு அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும் என்ற அழைப்பையும் விடுகின்றோம் எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.