கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல்!

 


மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு,  மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை நினைவுத்தூபிக்கு அருகே இன்று (28) காலை உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

காவல்துறையினா் தடைகளை ஏற்படுத்த முற்பட்ட போதிலும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பட்டிருப்பு கிளையின் தலைவருமான பா.அரியநேத்திரன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பலரும் கலந்து கொண்டனா்



இதன்போது நினைவுத்தூபியில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ம் திகதி இறால் வளர்ப்பு பண்ணையில் இடம்பெற்ற படுகொலையும் 1992ஆம் ஆண்டு ஜுன் 12ஆம்  திகதி இடம்பெற்ற மகிழடித்தீவு படுகொலையும் சேர்ந்து சுமாா் 239 பேர் படுகொலைசெய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.