தம்மிக்க பாணி தொடர்பாக இரண்டு வாரங்களில் இறுதி முடிவு!


கொரோனா வைரஸ் தடுப்புக்காக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தம்மிக்க பாணி தொடர்பாக எதிர்வரும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் இறுதி முடிவை அறிவிக்க எதிர்பார்ப்பதாக ஒளடத தயாரிப்பு மற்றும் ஒழுங்குப்படுத்தல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுபோன்ற மருந்து உற்பத்திகளை ஆய்வு செய்ய அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அவ்வாறான மருந்து உற்பத்திகளை ஊக்குவிப்பது அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்றில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், ´கேகாலை தம்மிக்க பண்டார தயாரித்த கொவிட் ஒழிப்பு உள்நாட்டு மருந்து உள்ளிட்டவைகள் குறித்த விஞ்ஞான ரீதியான ஆய்வுகள் இடம்பெறுகின்றன.

அவை தொடர்பான பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே அரசாங்கம் என்ற வகையில் எமது கடமை. அவ்வாறு இல்லாது எந்தவொரு மருந்து உற்பத்தியும் ஊக்குவிக்கப்படாது.

இதன் நன்மை தீமைகளை நாட்டுக்கு அறிவிப்போம். தம்மிக்க பண்டார தயாரித்த பாணி குறித்து இன்னும் இரண்டு வாரங்களில் இறுதி முடிவு எடுக்க முடியும் என நம்புகின்றேன்.

ஒக்ஸ்போட் தயாரிப்பான அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி முதன் முதலில் இலங்கைக்கு கிடைக்கும். அதன் பின்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்வோம்.

இதற்கிடையில் ரஸ்ய தடுப்பூசி பெறுவதற்கான பேச்சுவார்த்தைககள் இடம்பெற்று வருகின்றன. பற்றாக்குறை ஏற்படின் அவற்றை பணம் கொடுத்து வாங்க நடவடிக்கை எடுப்போம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.