காவல்நிலையத்தில் புகார் கொடுத்த விஜய்!!

 


தளபதி விஜய் திடீரென சென்னை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


நடிகர் விஜய்க்கு சாலிகிராமத்தில் சொந்தமான ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில்தான் அவர் பல வருடங்கள் இருந்தார் என்பதும் தற்போது அவர் ஈசிஆர் சாலையில் உள்ள ஆடம்பரம் வீட்டில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் தற்போது சென்னை சாலிகிராமத்தில் இருந்த தனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை அவர் காலி செய்யச் சொன்னதாகவும் ஆனால் அவர்கள் காலி செய்ய மறுப்பதாகவும் கூறப்படுகிறது


இதனை அடுத்து தன்னுடைய வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் இரண்டு பேரை வெளியேற்றக் கோரி நடிகர் விஜய் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. நடிகர் விஜய்யின் புகார் மீது காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.