வவுனியாவில் கள்ளச்சாராய வியாபாரி துப்பாக்கியுடன் தப்பியோட்டம்!


 வவுனியா கோயிற்குஞ்சுக்குளம், பாலமோட்டையை சேர்ந்த செல்லத்துரை சந்திரமோகன் என்பவரே தப்பியோடியுள்ளார் .

நேற்றைய தினம் மக்களால் முறைப்பாடு செய்யப்பட்ட போது இராணுவம் மற்றும் மக்கள் சுற்றிவளைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனை அறிந்த கள்ளச்சாராய வியாபாரி மற்றும் அவரது மனைவி தப்பியோடிய வேளை அவரது மனைவி மக்களால் நையப்புடைப்பக்கப்பட்டு, மக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கள்ளச்சாராய வியாபாரியான சந்திரமோகன் துப்பாக்கியுடன் காட்டிற்குள் தப்பியோடியுள்ளார். இவரை இராணுவம் வலை வீசி தேடி வருகின்றனர்.

இவர்களிடமிருந்து கள்ளச்சாராயம் காய்ச்சும் பெரல் , மற்றும் மூலதன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இவர்கள் தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். என்று அந்த ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இவர்களால் அந்த ஊர் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள்.

இவர்களை பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.