யோகிபாபுவுக்கு பா. ரஞ்சித் கொடுத்த வாய்ப்பு!

 


தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகி பாபு சமீபத்தில் இயக்குனர் பா ரஞ்சித் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதும் ’பொம்மை நாயகி’ என்ற டைட்டில் கொண்ட அந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியது என்பதும் தெரிந்ததே. இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷான் என்பவர் இயக்க உள்ளார்.


இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடலூர் அருகே உள்ள கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் யோகிபாபுவின் கேரக்டர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. யோகி பாபு இந்த படத்தில் ஒரு இளம்பெண்ணுக்கு தந்தையாக நடிக்கிறார் என்றும், இந்த படத்தில் அவர் டீக்கடை வைத்திருக்கும் ஒரு கேரக்டரில் நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது


பெரும்பாலான படங்களில் இதுவரை இளமையான கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த யோகி பாபு முதல் முறையாக ஒரு இளம்பெண்ணுக்கு தந்தையாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தில் அவர் முழுக்க முழுக்க சீரியஸ் கேரக்டரில் நடிக்கவிருப்பதால் நகைச்சுவையில் இருந்து குணசித்திர நடிகராக மாறுகிறார் என்பதும், பா ரஞ்சித் கொடுத்த இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது


இந்த படத்தின் படப்பிடிப்பு கடலூர் பகுதிகளில் 25 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் யோகிபாபுவின் மகளாக சுபத்ரா என்பவர் நடிக்கிறார். இவர் வடசென்னை படத்தில் கிஷோரின் மனைவியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிஎம் குமார், ஜானி ஹரி, கலக்கப்போவதுயாரு புகழ் ஜெயச்சந்திரன் உள்பட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.