மாறி மாறி கலாய்த்துக் கொண்ட தமிழ் நடிகர்கள்!!

 


அழகான ஆண்கள் அதிகம் வசிக்கும் பகுதி சேலம் என சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டதாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியானது. இந்த செய்தியை தனது டுவிட்டரில் வெளியிட்ட நடிகர் சதீஷ் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். நடிகர் சதீஷ் சேலத்தை சேர்ந்தவர் என்பதால் தன்னுடைய மாவட்டம் அழகான ஆண்கள் அதிகம் வசிக்கும் பகுதி என பெருமையுடன் அவர் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய டுவிட்டரில் ’இந்த கருத்துக்கணிப்பு நீங்கள் சென்னையில் செட்டில் ஆனதும் நடத்தப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் நீங்கள் சென்னையில் செட்டில் ஆனதால் தான் சென்னை முதல் இடம் பெறவில்லை என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று பதிலடி கொடுத்துள்ளார்


சிவகார்த்திகேயனின் இந்த பதிவுக்கு பதில் அளித்த சதீஷ் ’ரசிகர்களே யாரும் கடையடைப்பு, போராட்டம், பேரணியில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நண்பரது அட்மின் செய்த தவறு என்றும் இனி இவ்வளவு ஓபனாக கலாய்க்க மாட்டேன் என்றும் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். நன்றி வணக்கம் என்று அவர் பதிவு செய்துள்ளார்


சிவகார்த்திகேயன், சதீஷ் மாறி மாறி ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்ட இந்த பதிவுகள் தற்போது வைரலாகி வருகிறது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.