கணவனை துப்பாக்கியால் சுட்ட மனைவி!


 வவுனியா அரசமுறிப்பில் சுடப்பட்ட நிலையில் ஆண் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.

வவுனியா ஒமந்தை அரசமுறிப்பு பகுதியில் கணவன் மனைவிக்கு இடையில் இடம் பெற்ற சண்டையின் போது அங்கு வந்த பெண்ணின் சித்தப்பாவினால் குறித்த பெண்ணின் கணவன் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதோடு, விறகு கட்டையினாலும் சரமாரியாக தாக்குதல் நடாத்தியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக அக்கிராம மக்களினால் ஒமந்தை பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவ்விடம் விரைந்த பொலிஸாரால் குற்றவாளி கைது செய்துள்ளதுடன், குற்றத்திற்கு பயன்படுத்திய நாட்டு துப்பாக்கியையும் கைப்பற்றியுள்ளனர்.

சூட்டு காயத்திற்குள்ளானவர் 29 வயதான தேவராசா ஜெயசுதன் என்பவர் வவுனியா வைத்தியாசாலை அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா ஓமந்தை பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.