மந்திகை வைத்தியசாலை மலசல கூடத்தில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

 


பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் மலசலகூட குழிக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


 கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ,இச்சம்பவத்தில் கொல்லம் தோட்டம் கரணவாய் வடமேற்கு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான சண்முகம் சதீஸ்வரன்,  வயது 31  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை வயிற்றுக்குத்து ஏற்பட்ட நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 


அன்றைய தினம் அவர் மலசலகூடத்துக்குச்  சென்றபோது அங்கு விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார். அவரைப்  பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைகள் வயிற்றுப்பகுதியில் காணப்பட்ட கட்டி வெடித்ததின் காரணமாக மரணம் சம்பவித்தது என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.