நாம் மௌனம் காப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம் – திகாம்பரம்!


பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தாம் மௌனம் காப்பதாக யாரும் நினைத்துவிட வேண்டாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹற்றனில் இன்று இடம்பெற்ற கட்சி செயல்பாட்டாளர்களுடனான சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

‘அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தப்போவதாக அறிவித்துவிட்டே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

ஆனால், மொட்டுக்கட்சிக்கு வாக்களித்த மக்களே இன்று அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்ச்சிக்கின்றனர்.

பொருள்களின் விலை நாளாந்தம் உயர்வடைந்து வருகின்றது. சிலவேளை நாமும் அந்தப்பக்கம் சென்றிருந்தால் இந்நேரம் மக்களின் சாபத்துக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்கும்.

மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டது. ஜனாதிபதியும் இதுதொடர்பில் அறிவிப்புக்களை வெளியிட்டிருந்தார்.

ஆனால் அவரின் உத்தரவைக்கூட கம்பனிகள் ஏற்பதாகத் தெரியவில்லை. மறுபுறத்தில் அடுத்த பேச்சுவார்த்தையில் வெற்றி நிச்சயம் என வீராப்பு பேசிய கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே கம்பனிகளை ஒரு நிலைக்குக் கொண்டுவரமுடியும்.

இதனைச் செய்வதற்கு மாற்றுத் தரப்பினர் தயாராக இல்லை. சம்பள விவகாரம் தொடர்பாக எதிர்வரும் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பவுள்ளோம் எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.