இளைய தலைமுறை போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுக்க திட்டம் !

 


இளைய தலைமுறையினர் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுப்பதற்கு விசேட வேலைத்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

மூன்று பிரிவுகளின் கீழ் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

எமது இளைய தலைமுறையினர் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு இலக்காகி வருகின்றனர். மூன்று பகுதிகளாக இதனை ஒழிக்க எதிர்பார்த்துள்ளோம். அதில் ஒன்று இயன்றளவு நாட்டுக்குள் வரும் போதைப்பொருள்களைத் தடுக்க எதிர்ப்பார்த்துள்ளோம்.

இந்த போதைப்பொருள்களில் பெரும்பான்மையானவை ஆப்கானிஸ்தானில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவை பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஊடாகத்தான் வருகின்றன. இந்திய கடல் பாதைகளை அறிந்து அந்தக் கடல் பாதைகளில் கடற்படைக் கப்பல்களை நிறுத்தி அவற்றை முழுமையாக தடுக்கவுள்ளோம்.

இரண்டாவதாக, கேள்வியை குறைத்துக் கொள்ள வேண்டும். கேள்விகளைக் குறைத்துக் கொள்ள நாளை பாடசாலைகளில் குழுவொன்றை அமைக்கவுள்ளோம். அதனூடாக போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் போதைப்பொருள்களின் ஆபத்துக்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்க முடியும்.

மூன்றாவதாக, போதைக்கு அடிமையானவர்களை மீண்டும் ஒருபோதும் சிறையில் அடைக்க மாட்டோம். அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.