முல்லைத்தீவில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்திய இலங்கை காவல்துறை!

 


முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில், செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலார்களின் விவரங்கள் சிறிலங்கா காவல் துறையால் சேகரிக்கப்பட்டுள்ளன.

வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், அண்மையில், குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முல்லைத்தீவு காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்திருந்தார்.

அவ்வாறு முறைப்பாட்டில் குறிப்பிட்டதைப் போன்று வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பார்வையிடுவதற்கு சிங்கள காவல் துறை முறைப்பாட்டாளர் ரவிகரனை, நேற்று (29), குருந்தூர் மலைக்கு அழைத்துச்சென்றனர்.

இது தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை, மலைப்பகுதிக்குள் செல்வதற்கு காவல் துறை அனுமதி மறுத்ததுடன் அங்கு சென்ற ஊடகவியலாளர்களின் விவரங்களைச் சேகரித்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.