கிளிநொச்சியிலும் தடுப்பூசி திட்டம் ஆரம்பமானது!


 கொவிட் 19 தடுப்பூசிஏற்றும் பணிகள் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது.

இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்தில்1200 பேருக்கு
தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதாக கிளிநொச்சி பிராந்திய
சுகாதார பணிமனையினர் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் சரவணபவன் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து
கிளிநொச்சி வைததியசாலை வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட சுகாதார
துறையினர், பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்டோருக்கு குறித்த தடுப்பூசிகள்
வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் 9 இடங்களில் கொவிட் 19 தடுப்பு ஊசிகள்
வழங்கப்படுவதாகவும், 1200 பேருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள்
முன்னெடுக்கப்படுவதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை
குறிப்பிட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் தெடுப்பூசி ஏற்றம் பணிகள் இடம்பெற்ற வரும் நிலையில்
கிளிநொச்சி மாவட்டத்திலும் இன்று குறித்த வேலைத்திட்டம்
முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.