இலங்கை வருகின்றார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளை (செவ்வாய்க்கிழமை) இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.
அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொள்ளும் அவர் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை இலங்கையில் இருந்து அரச தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளிலும் கொவிட் -19 பயண கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்திய வெளிவிவகார அமைச்சரின் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை