போதைப்பொருள் பணியக அதிகாரியை கைதுசெய்ய சிவப்பு அறிவிப்பு!

 


பொலிஸ் போதைப்பொருள் பணியத்தின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வழக்கின் 14 ஆவது சந்தேக நபரான உதார சம்பத்தை இன்டர்போல் உதவியினூடாக கைதுசெய்ய நீதிமன்றம் சிவப்பு அறிவித்தல் பிறப்பித்துள்ளது.


இந்த உத்தரவினை இன்று காலை கொழும்பு தலைமை நீதவான் மொஹமட் மிஹெய்ல் பிறப்பித்தார்.


சட்டமா அதிபரை பிரதிநிதித்துவப்படுத்தும் துணை சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் 14 ஆவது சந்தேக நபர் போலி கடவுச் சீட்டினை பயன்படுத்தி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார்.


இதனையடுத்து அவரை சர்வதேச பொலிஸான இன்டர்போலின் உதவியுடன் கைதுசெய்யவே நீதிமன்றம் சிவப்பு அறிவித்தலை பிறப்பித்தது.


பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை போதைப்பொருள் கடத்தற்காரர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைதான பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் 13 அதிகாரிகள் உட்பட 16 நபர்களுக்கான விளக்கமறியல் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டது.


மேலும் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.