சொக்லேற் கனவுகள் 15 - கோபிகை!!


மீண்டும்  நிமிர்ந்து

அனுதியை மெல்ல

உற்றுப் பார்த்தான்

ஆதித்தன். 


'இவ்வளவு நாளா 

பக்கதிலயே இருந்த

அட்ட பிகரு....'

'இவ்ளோ அழகா

இவள்????'


சிலிர்த்த எண்ணங்கள்

சிந்தனையில் ஓடியது,

வினாக்களுடன்

சிறு புன்னகையும்

சேர்ந்தே உதித்தது...

ஆதித்தனிடம்...


பட்டாசு போல

பட்டென்று தோன்றிய

அரை நொடி

நெஞ்சில்

நூறு பூப்பொறிகளைத்

தூவிச் சென்றது.


முதல் முதலாய்

காதலோடு தன்

தேவதையை 

இரசித்ததில்

பேரின்பம் கிளர்ந்தது

அவனுக்குள்...


கனிகாவின் பிறந்தநாளின்

மறுநாளில்,

தங்களுக்கிடையே நடந்த

உரையாடல் 

மீண்டும் நினைவில்

ஊறி வடிந்தது.


கோபம் ஆறுமுன்

திரும்பவும் 

அழைப்பெடுத்த கனிகா,

'பேசவேண்டும்' என 

வலுக்கட்டாயமாக 

அழைத்திருந்தாள்....


அப்போதைய சந்திப்பு

அவ் ஊரின் தேவாலயம் 

ஒன்றின் அருகில்.........


அவளைக் கண்டும்

சில நிமிடங்கள்,

மௌனமாயிருந்தவனிடம்,

'ஆதி.....நான் ...நேற்று...'

'சொல்லு......'

விட்டேற்றியாய் 

கேட்டான். 


'உலகத்தில 

எந்த ஆணுமே

உங்களை மாதிரி 

இருக்கமாட்டான்....'


இவன் பதிலுக்கு

உக்கிரமான ஒரு 

பார்வையை மட்டுமே

வீசி வைத்தான். 


தான் காதலிக்கிற 

பெண்ணைப் பாக்க

மைத்துனியோட வந்த

முதல் ஆம்பிளை

நீங்களாத்தான் இருப்பீங்க....


சுருக்கென்று தைத்தது

இவனுக்குள்....


கனவுகள் தொடரும்

கோபிகை.



Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.