பசறை தேசிய பாடசாலையில் 6 மாணவர்களுக்கு கொரோனா!
பதுளை- பசறை தேசிய பாடசாலையில் 6 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் 4 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த மாணவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்கள் சென்று வந்த பகுதிகள் இனங்காணப்பட்டு அப்பகுதிகளிலும் பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை ஹம்பலந்தோட்டை- மாகோலனிய பகுதிக்கு பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் 34 பேர், கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை