டிஸ்சார்ஜ் ஆனார் கமல்ஹாசன்!!

 


தேர்தல் பிரச்சாரம் ஐந்து நாட்கள், பிக்பாஸ் படப்பிடிப்பு ஒரு நாள் என வாரத்தின் ஆறு நாட்களில் பிஸியாக கடந்த சில வாரங்களாக இயங்கி வந்தார் உலக நாயகன் கமல்ஹாசன். இந்த நிலையில் கடந்து ஞாயிறுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் முழுநேர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது


ஆனால் தனது காலில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என்றும் அதனால் சில நாட்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு விடுமுறை எடுத்துக் கொள்வதாகவும் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடந்த நிலையில் இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். இருப்பினும் இன்னும் சில நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது


இந்த நிலையில் கமல்ஹாசனின் அடுத்த கட்ட தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்கும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர் மகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியபோது ’மருத்துவர்கள் கூறிய ஓய்வு காலம் முடிந்த பின்னர் கமல்ஹாசன் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என்றும், அவருடைய அடுத்த கட்ட தேர்தல் பிரச்சாரம் குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.