இலங்கையில் மேலும் இருவர் உயிரிழப்பு!!

 


கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இதனையடுத்து, இலங்கையில் பதிவான கொவிட் 19 மரணங்களின் மொத்த எண்ணிக்கை 213 ஆக உயர்வடைந்துள்ளது.


அதன்படி வெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான பெண்ணொருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.


அவரது மரணத்திற்கான காரணம் கடுமையான மார்பு தொற்று மற்றும் கொவிட் 19 நிமோனியா நிலையென தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேநேரம், கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயதான பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.


மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா, இதய நோய் நிலைமை மற்றும் வலிப்பு நோய் நிலை என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.