நல்லூர் லயன்ஸ் கழகத்தினால் நெல்லியடியில் விழிப்புணர்வுச் செயற்பாடு!!

 


23.01.2021.யாழ்ப்பாணம் நல்லூர் லயன் கழக இளைஞர்களும் கரவெட்டி சுகாதார உத்தியோகத்தர்களும் இணைந்து நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோணாரா தலைமையிலான போலீசார் இன்று நெல்லியடி நகரில் விழிப்புணர்வு நிகழ்வினை முன்னெடுத்தனர். 


முகக் கவசத்தை சரியான முறையில் அணியாதவர்களும்  முகக் கவசம் இல்லாமல் வந்தவர்களும் கடும் எச்சரிக்கைக்குபின் நல்லூர் லயன்கழகத்தினால்  முகக் கவசம் இலவசமாக வழங்கப்பட்டது. தொடர்ந்தும் முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு  இனிவரும் நாட்களில்  சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொறுப்பதிகாரி அவர்களினால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.