இளம் குடும்பப் பெண் கொலை - பூநகரியில் சம்பவம்!!
கிளிநொச்சி- பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தெளிகரை பகுதியிலுள்ள வீடொன்றில் குறித்த பெண் இரத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, பூநகரி வைத்தியசாலைக்கு சடலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் 30வயது மதிக்கத்தக்கவர் எனவும் சம்பவம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பூநகரி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை