உலகிற்கு சிவப்பு எச்சரிக்கை!

 


உலக நாடுகள் புவி வெப்பமடைதல் குறித்து சரியான நடவடிக்கைகளை எடுக்காது விட்டால் அடுத்த சில ஆண்டுகளில் உலக வெப்பமாதல் மேலும் 1.5 டிகிரி செல்சியஸ் உயரும் என தெரியவந்துள்ளது.

சர்வதேச அமைப்பினால் மேற்கொண்ட ஆய்விலிருந்து இது தெரியவந்துள்ளது.

இந்த சூழ்நிலையை உலகம் எதிர்கொண்டால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, உலக வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள நாடுகள் இனிமேல் தயாராக இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

புவி வெப்பமடைதல் குறித்து விடுத்துள்ள எச்சரிக்கை உலகிற்கு பொது சிவப்பு எச்சரிக்கை என ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.