கோட்டாபய எழுதிய கடிதம் தொடர்பில் வெளிவந்த செய்தி!

 


ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவு கோரி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முதலில் இந்திய பிரதமருக்கே கடிதம் அனுப்பினார் என இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து வெளிவரும் இந்து நாளிதழுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எமது ஜனாதிபதி ஆதரவுகோரும் கடிதத்தை முதலில் இந்திய பிரதமருக்கே அனுப்பினார்.

ஏனென்றால் தெற்காசிய ஒற்றுமை குறித்து நாங்கள் உணர்வுபூர்வமாக உள்ளோமென ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு அதன் அயல்நாடுகளின் ஆதரவு மிகவும் அவசியமாக உள்ளது, நாங்கள் மிகவும் அசாதாரணமான ஒன்றை கேட்கவில்லை.

நாங்கள் அயலவர்களுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே நாங்கள் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜெனீவாவில் இந்தியா, இலங்கைக்கு ஆதரவு வழங்கவேண்டும் எனவும், இந்தியா எங்களை கைவிட முடியாது என்றும்

ஜெனீவாவில் தெற்காசிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்காவிட்டால் இலங்கை மிகவும் குழப்பமடையும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ் இலங்கைக்கு ஆதரவளிக்குமென நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.