ஆதிவாசிகளுக்கு இடையிலும் கொரோனா பரவும் அபாயம்

 


தனது சமூகத்தினர் தொடர்பிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என ஆதிவாசிகளின் தலைவர் வன்னில அத்தோ தெரிவித்துள்ளார்.


மஹியங்கன பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதிகாரிகள் எவ்வித கவனமும் செலுத்துவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பதுளை மாவட்டத்தில் 61 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதுடன் அதில் 33 பேர் மஹியங்கனை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.