நேற்று 715 பேருக்கு தொற்று!


 நாட்டில் நேற்று 715 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 65,698 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்கள் அனைவரும் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்களென தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

6,325 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று 948 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 59,043 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் 1,248 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.