சாவகச்சேரியில் விபத்து!


தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோரி விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் இடம்பெற்றது.சாவகச்சேரியிலிருந்து கொடிகாமம் நோக்கி சென்ற ஹயஸ் வானும் கொடிகாமத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் நெல்லியடியைச் சேர்ந்த ஜெகன் அன்ரனி சியாம் (வயது 20)என்பவர் உயிரிழந்துள்ளதுடன் பருத்திதுறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த சந்திரகுமார் சுதர்சன் (வயது 24) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.