உடல்கள் புதைப்பதாக இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை!


கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப் போவதாக நேற்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச சபையில் தெரிவித்திருந்த போதிலும் தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது என கோவிட் ஒழிப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோ புள்ளே தெரிவித்துள்ளார் .

அத்துடன் அவர்களோடு கலந்துரையாடிய பின்னரே முடிவெடுக்கப்படும் எனவும் நேற்றைய அறிவிப்பின் பின்னணியில் எப்போது சுற்று நிருபம் வெளியாகும் என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் வினவியதற்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி இவ்வாறு பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், இதற்கு பதிலளித்த மு.கா தலைவர் எம்.பி ரவுப் ஹக்கீம், பிரதமரை விடவும் உயர்ந்த அந்த தொழிநுட்ப குழு யார்? ஏன் பிரதமரின் பேச்சை மீறி இவ்வாறு மீண்டும் பழைய நிலைக்குச் சென்று குழப்பங்களை உருவாக்குவதாக கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.