கொரோனாவிலிருந்து 591 பேர் பூரண குணம்!
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 591 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (புதன்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்து 644ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை