மேலும் 336 பேருக்குக் கொரோனா தொற்று!


நாட்டில் மேலும் 336 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67 ஆயிரத்து 541ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 894 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ள நிலையில் மொத்தமாக 61ஆயிரத்து 461 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 651 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

அத்துடன், இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 339 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.