மேற்கு முனையத்தை துறைமுக அதிகார சபையின் கீழ் வைக்க தீர்மானம்!!


தேவை ஏற்படின் மேற்கு முனையத்தை இலங்கையின் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் தரப்பினருக்கு வழங்குவது குறித்து ஆராய்ந்து பார்க்க முடியும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக இலங்கை துறைமுக அதிகார சபையின் கீழ் வைத்துக்கொள்ள அமைச்சரவைத் தீர்மானித்துள்ளது.

கொழும்பு தெற்கு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் அபிவிருத்தி செய்வதற்கான இலங்கை, இந்திய, ஜப்பான் நாடுகளுக்கிடையிலான பங்களிப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த உடன்டிக்கையின் ஏற்பாடுகளுக்கமைய இந்தியாவின் முதலீட்டாளரால் சமர்ப்பிக்கப்பட்ட முதலீட்டு முன்மொழிவை பகுப்பாய்வு செய்வதற்காக பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவொன்றை நியமிப்பதற்கு 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.