வீதியில் சென்றுகொண்டிருந்த நபர் திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு!


யாழ்.நல்லூர் - கோவில் வீதியில் மிதி வண்டியில் பயணித்த போது திடீரென மயங்கி விழுந்த முதியவர் ஒருவர் உயிரழந்தமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கொழும்புத்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரே இவ்வாறு உயிரழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் மாரடைப்பினால் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் மரக்கறி கடை நடாத்துபவர் என்றும், இன்று காலை வீட்டில் இருந்து மரக்கறி வாங்க திருநெல்வேலி பொதுச் சந்தைக்கு சைக்கிளில் சென்றதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாடபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.