இளம் பெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!


தென்மராட்சி வரணிப் பகுதியில் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் வரணி குடமியன் பகுதியில் நேற்று (18) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து குறித்த பெண் தூக்கில் தொங்கியுள்ளதாகத் தெரியவருகிறது.

அத்துடன் இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்னர் திருமணம் நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குடும்பத்துக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாகத் தான் குறித்த பெண் தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியுள்ளார் எனவும் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிருசுவில் வடக்கை சொந்த இடமாகக் கொண்ட பெண் குடமியன் பகுதியில் வசிக்கும் மரக்கறி வியாபாரி ஒருவரையே திருமணம் செய்துள்ளார்.

இதில் கமலநாதன் கெளசல்யா (வயது 23) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.