தென்னிலங்கையில் நடந்த கொடூர கொலை!!
தென்னிலங்கையில் இடம்பெற்ற கொலை சம்பவமொன்று அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஹவ, நெத்திபலகம என்ற பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிகின்றனர்.
38 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் அறியமுடிகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக விசாரணைகளை மஹவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை