வர்த்தக, முதலீட்டு மாநாட்டில் பங்கேற்றனர் இலங்கை – பாகிஸ்தான் பிரதமர்கள்!

 


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொழும்பில் இடம்பெற்ற வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்றார்.

இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இம்மாநாட்டில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் உயர்மட்ட வர்த்தக பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் மற்றும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர், நேற்றைய தினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையில் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இன்றைய வர்த்தக மற்றும் முதலீட்டு மாநாடு இருநாட்டு முன்னணி வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அவர்களது எண்ணப்படி எதிர்கால வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட குழுவினர், இன்று மாலை விஜயத்தை நிறைவுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.