இங்கிலாந்து அணி 112 ஓட்டங்களுக்குள் சுருண்டது!
இந்தியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 112 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.
புதிதாக அமைக்கப்பட்ட அகமதாபாத் மைதானத்தில் பகலிரவு போட்டியாக ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க அவ்வணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக சாக் கிரோலி 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் இந்திய அணி சார்பாக அக்சர் படேல் 6 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை