ஏழாம் திகதியே பொத்துவில் – பொலிகண்டி பேரணி யாழ்ப்பாணம் வரும்!


பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆறாம் திகதி யாழ்ப்பாணத்தில் பேரணியை முடிப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்ட நிலையில், தற்போது ஏழாம் திகதியே யாழ்ப்பாணத்தை போராட்டம் வந்தடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில், யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் எதிர்வரும் ஆறாம் திகதி வரை போராட்டங்களை நடத்துவதற்கு நீதிமன்றங்களின் மூலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.

மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் வருவதாக முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், மட்டக்களப்பில் ஏற்பட்ட எழுச்சியையடுத்து, கிளிநொச்சி ஊடாகவும் போராட்டம் செல்ல வேண்டுமென சி.சிறிதரன் எம்.பி தரப்பினர் விடுத்த கோரிக்கையையடுத்து, கிளிநொச்சி ஊடாக பேரணி பயணிக்க ஏற்பாடாகியுள்ளது.

இதன்படி, வரும் 7ஆம் திகதி பேரணி யாழ்ப்பாணத்தை சென்றடையும்  என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.