இலங்கை வீரர்களுக்கு 2 கி.மீற்றர் தூர உடற்தகுதி சோதனை!


இலங்கை கிரிக்கெட் அணியிலுள்ள வீரர்களுக்கான உடற்தகுதியை பரிசோதிப்பதற்கான திட்டம் நேற்று(வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

2 கிலோ மீற்றர் தூரத்தை ஓடி கடப்பதற்கான சோதனையே இவ்வாறு சுகததாஸ விளையாட்டரங்கில் முன்னெடுக்கப்பட்டது.

மேற்கிந்திய தீவுகள் அணியுடனான தொடரில் வைிளையாடுவதற்காக தெரிவுசெய்யப்பட்ட இலங்கை அணியின் 36 வீரர்களுக்கு இவ்வாறு சோதனைகள் முன்னெடுக்க்பட்டன.

எனினும், இதில் 32 வீரர்கள் பங்குப்பற்றியதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஏற்கனவே பின்னபற்றப்பட்டு வந்த யோ – யோ முறைமைக்கு பதிலாக இந்த புதிய உடற்தகுதி சோதனை முறைமை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2 கிலோமீற்றர் தூரத்தை 8 நிமிடமும் 35 விநாடிகளில் ஓடி முடிக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பந்துவீச்சாளர்கள், துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் விக்கெட் காப்பாளர் உள்ளிட்டவர்களுக்கு வெவ்வேறு நேர இலக்கு வழங்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் தோல்வியுறும் வீரர்கள் 40 நாட்களுக்குள் மீண்டும் தமது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் இருபதுக்கு 20 உலகத்தொடருக்கு முன்னர் அணி விரர்களின் உடல் தகுதியை மேம்படுத்துவதே நோக்கமாக அமைந்துள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட்டின் உடல் செயல்திறன் தொடர்பான முகாமையாளர் கிராண்ட் லுடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நேற்றைய சோதனையில் நான்கு வீரர்கள் பங்கேட்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குசல் மெண்டிஸ், தனஞ்சடி சில்வா, அவிஸ்க பெர்ணான்டோ மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோரே இவ்வாறு சோதனையில் பங்கேட்கவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.