மேலும் 207 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!


தொழில்வாய்புக்காக கட்டாருக்கு சென்று பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளான 207 இலங்கையர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி இவர்கள் இன்று அதிகாலை 5.25 மணிக்கு ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் மூலமாக கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களில் பெரும்பலானவர்கள் பணிப்பெண்களாக கட்டார் சென்றவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் அனைவரும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காகவும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இலங்கை அரசாங்கத்தின் திருப்பி அனுப்பும் விசேட திட்டத்தின் கீழ் இவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.