துப்பாக்கி ரவைகளுடன் விமான நிலையத்திற்குள் சென்ற பொலிஸ் கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குள், T-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 15 துப்பாக்கி ரவைகளை கொண்டு செல்ல முயற்சித்த பொலிஸ் அதிகாரி ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவரை வரவேற்பதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் விமான நிலையத்தில் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த சந்தர்ப்பத்திலேயே, குறித்த பொலிஸ் அதிகாரி, விமான நிலையத்திற்குள் துப்பாக்கி ரவைகளை கொண்டு செல்ல முயற்சித்துள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் கடமையாற்றும் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை