தமிழர்களின் வழிபாட்டு முறைகளை கடைப்பிடிக்கும் வெளிநாட்டடவர்கள்!


வெளிநாடொன்றில் தமிழர்களின் வழிபாட்டு முறைகள் அங்கு வாழும் மக்கள் கைடைப்பிடித்து வருகின்றதாக கூறப்படுகின்றமை பெரும் வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.

பாலி நாட்டிலே வாழும் மக்களே இவ்வாறு தமிழரின் வழிபாட்டு முறைகளை தற்போதும் பின்பற்றுவதாக கூறப்படுகின்றது.

பாலி நாட்டிலுள்ள பெஜி கிரிய நீர்வீழ்ச்சிக்கு(Beji Griya Waterfall) அருகே தமிழரின் தொண்மைக்கால வழிபாட்டுமுறைகளைப் பிரதிபலிக்கும் சிவலிங்கம், விநாயகர், நாகம் என்பன இன்றும் அங்கு கம்பீரமாக காட்சியளிக்கின்றன.

சைவத் தமிழ் மக்களின் சிவ வழிபாடு உலகெங்கும் வியாபித்திருக்கின்றது என்பதற்கான ஆதாரமாக இது இருப்பதுடன் இன்றும்கூட பாலி மக்கள் ஆசாரசீலர்களாக அவ்விடங்களில் வழிபாடுகளை மேற்கொண்டுவருவது சிறப்புக்குரியதாகும்.

மேலும் தனித்துவம் மிக்கதாக மலைகளையும் கற்களையும் உயிரோட்டமாக செதுக்கிய சிற்பங்களையும் அமைதியான அழகான சூழலில் அழகிய குளிர்மையான நீர்வீழ்ச்சிக்கருகிலே இறைவனை மெய்யன்போடு வணங்குவதற்கான இடமாக உருவாக்கியிருப்பது வியப்பினையே தோற்றுவிக்கின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.