காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு!

 


பதுளை நாரங்கல மலையில் நேற்றிரவு காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


நாரங்கல மலை பகுதியில் நண்பர்களுடன் முகாமிட்டிருந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இராணுவத்தினர், காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையில், மலையின் பள்ளத்தாக்கிலிருந்து இன்று பகல் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.


அவிசாவளை - மானியம பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


இவர், நேற்றைய நாளில் 6 நண்பர்களுடன் நாரங்கல மலை பகுதியில் இரவு நேரத்தில் அவர்கள் அங்கு முகாமிட்டு தங்கியுள்ளதாகவும், அங்கிருந்து வெளியே சென்ற குறித்த இளைஞன், காணாமல்போயிருந்த நிலையில், இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.