வல்லிபுரக் குறிச்சிப் பகுதியில் மோதல்!!

 


வடமராட்சி வல்லிபுரக் குறிச்சி பகுதியில் இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  வல்லிபுரக் குறிச்சி பகுதியில் தற்போதும் மோதல்கள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருபெண்களும், ஒரு ஆணுமாக மூவர் கால்கள் மற்றும் கைகளில் ஆழமாக காயமேற்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தற்போது முழுமையான விபரம் தெரியவில்லை. குறித்த பகுதியில் கள்ள மணல் ஏற்றும் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியே இதற்கான காரணம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.