'காதலர் தினத்தில்' கலக்கல் அறிவிப்பு- விக்னேஷ் சிவன்!!

 


காதலர் தினத்தில் ஒரு கலக்கலான அறிவிப்பு வெளியாக இருப்பதாக நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படம் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடித்துவரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில் கடவுளின் அருளால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து விட்டது என விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


மேலும் இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படத்தின் முக்கிய அறிவிப்பு காதலர் தினத்தில் வெளியாக உள்ளதை அடுத்து அந்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படத்தை ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் லலித் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.